“சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை”- பத்ரிநாத் கருத்து..!!!

"சிஎஸ்கே அணிக்கு ஆக்ரோசமாக விளையாடக்கூடிய வீரர்கள் தேவை"- பத்ரிநாத் கருத்து..!!!

ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது இந்தியாவில் நடைபெற்று வரும் 2025 ஐபிஎல் தொடரின் முதல் 10 போட்டிகளில் எட்டு போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

இதன் மூலம் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை சிஎஸ்கே அணி முற்றிலுமாக இழந்துள்ளது.

அதுமட்டுமின்றி கடந்த ஆண்டு பிளே-ஆஃப் வாய்ப்பை இழந்த சிஎஸ்கே இந்த ஆண்டும் பிளே-ஆஃப் வாய்ப்பை தவறவிட்டுள்ளது.

ஐபிஎல் வரலாற்றில் தொடர்ந்து இரண்டு ஆண்டுகளாக முதல் முறையாக பிளேஆஃப் சுற்றுக்கு தகுதி பெறாமல் போனது சிஎஸ்கே அணிக்கு இதுவே முதல் முறையாகும்.

இதன் மூலம் சிஎஸ்கே அணியின் மெகா ஏலத்தின் போது சரியான வீரர்களை வாங்காததுதான் சிஎஸ்கேவின் மிகப்பெரிய சரிவுக்கு காரணம் என்று பல்வேறு கிரிக்கெட் விமர்சகர்கள் தங்களது கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர்.

ஏனென்றால் மற்ற அணிகள் எல்லாம் டி20 போட்டிகளில் ஆக்ரோஷமாக விளையாடும் வீரர்களைத் தேர்வு செய்தது.ஆனால் சென்னை அணி மட்டும் ஏலத்தில் சுமாரான வீரர்களைத் தேர்ந்தெடுத்தது. இதுவே சிஎஸ்கே அணியின் சரிவுக்கு முக்கிய காரணம் என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், முன்னாள் சிஎஸ்கே வீரர் பத்ரிநாத் சில ஆவேசமான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.அடுத்த ஆண்டு சிஎஸ்கே தனது அணியை வலுப்படுத்த விரும்பினால், அஸ்வின் மட்டுமல்ல, ஜடேஜா மற்றும் விஜய் சங்கரையும் சென்னை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், “அஸ்வின் எனது நண்பர், அவர் மீது எனக்கு மிகுந்த மரியாதை உண்டு. ஆனால் சிஎஸ்கே அவரை அடுத்த ஆண்டு விடுவிக்க வேண்டும் என்று நினைக்கிறேன்.”அதேபோல், ரவீந்திர ஜடேஜா மற்றும் விஜய் சங்கர் ஆகியோரும் அணியில் இருந்து நீக்கப்பட்டால், சிஎஸ்கே நல்ல தொகையுடன் மினி ஏலத்திற்குச் செல்லும்.

மேலும் அப்படி மினி ஏலத்திற்குச் செல்லும்போது, ​​பிக் பேஷ் அல்லது பிற லீக்குகளில் சிறப்பாக விளையாடும் வீரர்களை வாங்க முயற்சி செய்யலாம். ஏனென்றால் தற்போதைய சிஎஸ்கே அணியில் ஆட்டத்தை மாற்றக்கூடிய வீரர்கள் தேவை என்று கூறினார்.