சிங்கப்பூர் பொதுத் தேர்தல்!!அமெரிக்கா வாழ்த்து!!

சிங்கப்பூரில் நேற்று (மே 3) பொதுத்தேர்தல் நடைபெற்றது.நடந்த இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது.பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மக்கள் செயல் கட்சிக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.சுமார் 60 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தைப் பாதுகாப்பாக,சுதந்திரமாக,செழிப்பாக வைத்துகொள்வதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி,தற்காப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த பிரதமர் வோங்குடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.சிங்கப்பூரில் நேற்று (மே 3) பொதுத்தேர்தல் நடைபெற்றது.நடந்த இந்த தேர்தலில் மக்கள் செயல் கட்சி வெற்றி பெற்றது.பிரதமர் லாரன்ஸ் வோங் மற்றும் மக்கள் செயல் கட்சிக்கு அமெரிக்கா வாழ்த்து தெரிவித்துள்ளது.சுமார் 60 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் சிங்கப்பூர் ஆகிய இரு நாடுகளும் வலுவான உறவைக் கொண்டுள்ளதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
இந்தோ-பசிபிக் வட்டாரத்தைப் பாதுகாப்பாக,சுதந்திரமாக,செழிப்பாக வைத்துகொள்வதில் இரு நாடுகளும் உறுதி கொண்டுள்ளதாக அவர் கூறினார்.
இரு நாடுகளுக்கும் இடையே பொருளாதார வளர்ச்சி,தற்காப்பு மற்றும் பாதுகாப்பை வலுப்படுத்த பிரதமர் வோங்குடன் இணைந்து செயல்பட ஆர்வமாக இருப்பதாக அவர் கூறினார்.

Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan