தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025: இந்தியாவிற்கு பெருமையைச் சேர்த்த ஜோதி யர்ராஜி..!!!

தைவான் தடகள ஓபன் 2025 நேற்று (சனிக்கிழமை) சீன தைபேயில் தொடங்கியது. இந்தியாவின் நடப்பு ஆசிய சாம்பியனான ஜோதி யர்ராஜி இதில் பங்கேற்று சாதனை படைத்துள்ளார்.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்தில் அவர் 12.99 வினாடிகளில் பந்தயக் கோட்டைக் கடந்தார். தொடக்கம் சரியாக இல்லாததால் 2வது இடத்திற்குத் தள்ளப்பட்டார்.இருப்பினும், அவர் தொடர்ந்து முன்னேறி கடைசி 20 மீட்டரில் முதலிடத்தைப் பிடித்தார்.

இந்தப் போட்டியில், ஜப்பானின் அசுகா திராடா
13.04 வினாடிகளில் ஓடி இரண்டாவது இடத்தைப் பிடித்தார். அவரது சகநாட்டவர் சிசாடோ கியோயாமா (13.10 வினாடிகள்) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.

பெண்களுக்கான 100 மீட்டர் தடை ஓட்டத்திலும் ஜோதி இந்திய தேசிய சாதனையைப் படைத்துள்ளார். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உலக பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளில் 12.78 வினாடிகளில் ஓடி இந்த சாதனையைப் படைத்தார்.

இந்நிலையில் தங்கப்பதக்கம் வென்ற ஜோதி யர்ராஜிக்கு பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.