தெம்பனிஸில் உள்ள வீட்டில் இறுதிச் சடங்கு...!!! தலைவர்கள் அஞ்சலி...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பு ஒத்திகையின் போது மயங்கி விழுந்து மருத்துவமனையில் இறந்த 47 வயது ஆண் துணை காவல் அதிகாரியின் உடல் இன்று (22.06.25) மதியம் அடக்கம் செய்வதற்கு முன் தெம்பனிசில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டுவரப்பட்டது.
அங்கு அவருக்கு 100க்கும் மேற்பட்ட உறவினர்கள் மற்றும் நண்பர்கள் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கலாச்சாரம், சமூகம் மற்றும் இளைஞர் துறை அமைச்சரும், கல்விக்கான மூத்த துணை அமைச்சருமான லியாங் ஜென்வே, இன்று மதியம் குடும்பத்தினரை சந்தித்து தனது இரங்கலைத் தெரிவித்தார்.
இறந்தவரின் குடும்பத்தினர் இன்று காலை மத்திய மருத்துவமனையில் அவரின் உடலைப் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இறந்தவரின் பெற்றோரின் வீட்டில் இறுதிச் சடங்கு நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த விஷயத்தை ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தாங்கள் விரும்பவில்லை என்றும், வெளி உலகம் தங்கள் தனியுரிமையை மதிக்கும் என்று நம்புவதாகவும் குடும்பத்தினர் முன்பு கூறியிருந்தனர்.
இந்த சம்பவம் நேற்று (21.06.25) நடந்தது.
மேலும் இறந்தவர் சாங்கி விமான நிலையத்தில் Cerebral Security Agency உடன் தொடர்புடைய ஒரு துணை போலீஸ் அதிகாரியாக பணியாற்றியவர்.