சிங்கப்பூரில் முதல் உள்ளூர் ஸ்மார்ட் மறுசுழற்சி மையம்!!

கழிவுகளை வகைப்படுத்துவது குறித்து பொதுமக்களை ஊக்குவிப்பதற்கும் அவர்களுக்கு கற்பிப்பதற்கும் ஒரு வருட சோதனை திட்டமாக குயின் டவுனில் முதல் உள்ளூர் ஸ்மார்ட் மறுசுழற்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொண்டு நிறுவனமான 0 வேஸ்ட் எஸ் ஜி மற்றும் ஆம்பர்ஹார்ட் அறக்கட்டளையால் தொடங்கப்பட்ட “சோர்ட் இட் அவுட் மறுசுழற்சி மையம்” இன்று 14 ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டது.
இந்த ஸ்மார்ட் மறுசுழற்சி மையம் குயின் டவுனில் அமைந்துள்ளது.
இந்த ஸ்மார்ட் மறுசுழற்சி மையத்தில் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளதால் இது பிளாஸ்டிக், காகிதம், உலோகங்கள் மற்றும் கண்ணாடி ஆகியவற்றை மறுசுழற்சி செய்வதற்கான தொட்டிகளில் பிரித்து நிரப்பி விடும்.
இந்த ஸ்மார்ட் மறுசுழற்சி மையம் பொதுமக்களுக்கு வழிகாட்டுதலை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. மறுசுழற்சியின் முக்கியத்துவத்தைப் புரிந்து கொள்ள உதவுவதோடு அவர்களின் கழிவுகளை எவ்வாறு முறையாக வரிசைப்படுத்துவது என்பது குறித்து தெளிவான வழிகாட்டுதலையும் வழங்கும். மறுசுழற்சி செய்யக்கூடிய பொருட்கள் எங்கு செல்கின்றன என்பதை பொதுமக்களுக்கு விளக்கும் ,மறுசுழற்சி செயல்பாட்டில் பொதுமக்களின் நம்பிக்கையை மீண்டும் கட்டி எழுப்ப நம்பிக்கையுடன் தளத்தில் தகவல் வரைப்படங்களும் இருக்கும்.
Follow us on : click here
WHATSAPP CHANNEL LINK
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
