சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!!

சிங்கப்பூரில் நடைபெறும் பொதுத் தேர்தல்..!!! ஜனநாயகக் கடமையை ஆற்றும் மக்கள்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

இந்தத் தேர்தலில் சுமார் 2.75 மில்லியன் மக்கள் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர்.

மக்கள் அமைதியுடன் வரிசையாக நின்று வாக்களித்து செல்கின்றனர்.

சிங்கப்பூரில் இடியுடன் மழை பெய்து வருகிறது. இருப்பினும் மக்கள் தங்கள் கடமைகளை ஆற்ற வாக்குச்சாவடிக்கு வந்துள்ளனர்.

மொத்தம் 1240 வாக்கு சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.

வெளிநாடுகளில் வசிக்கும் ஆயிரக்கணக்கான சிங்கப்பூரர்களும் வாக்களித்து வருகின்றனர்.

வெளிநாடுகளில் வசிக்கும் சுமார் 18,000 சிங்கப்பூரர்கள் வாக்களிக்கப் பதிவு செய்துள்ளனர்.

2020 பொதுத் தேர்தலில், கிட்டத்தட்ட 5,000 பேர் வெளிநாடுகளில் இருந்து வாக்களித்தனர்.

தேர்தல் முடிந்த 10 நாட்களுக்குப் பிறகே வெளிநாட்டு வாக்காளர்களின் வாக்குகள் எண்ணப்படும்.

திரு. லாரன்ஸ் வோங் கடந்த ஆண்டு (2024) பிரதமராகப் பதவியேற்ற பிறகு நடைபெறும் முதல் தேர்தல் இதுவாகும்.

மரைன் பரேட் – பிராடெல் ஹைட்ஸ் தொகுதியில் மக்கள் செயல் கட்சி போட்டியின்றி வெற்றி பெற்றுள்ளது.

2020 பொதுத் தேர்தலுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு வாக்காளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 100,000 அதிகரித்துள்ளது.

இன்று இரவு எட்டு மணி வரை வாக்காளர்கள் தங்கள் வாக்குகளை செலுத்தலாம்.

 

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan