நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!

நார்வே சதுரங்க போட்டியில் 4 வது சுற்றில் வெற்றி பெற்ற குகேஷ்..!!!

நார்வே கிளாசிக்கல் சர்வதேச சதுரங்கப் போட்டி ஸ்டாவஞ்சர் நகரில் நடைபெற்று வருகிறது.

நடப்பு உலக சாம்பியனான குகேஷ் (இந்தியா), 5 முறை உலக சாம்பியனான மாக்னஸ் கார்ல்சன் (நோர்வே), மற்றும் அர்ஜுன் எரிகைசி (இந்தியா) உள்ளிட்ட ஆறு வீரர்கள் சிறந்த பிரிவில் பங்கேற்கின்றனர்.

இதில் ஒவ்வொரு வீரரும் மற்ற வீரர்களுடன் இரண்டு முறை விளையாடுவார்கள்.

4வது சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ், பாபியானோ கருனாவை (அமெரிக்கா) எதிர்கொண்டார்.

4 மணி நேரம் நீடித்த இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது.

இதைத்தொடர்ந்து வெற்றி, தோல்வியை முடிவு செய்ய நடந்த டைபிரேக்கரில் வெள்ளை நிற காய்களுடன் ஆடிய குகேஷ் 51-வது நகர்த்தலில் பாபியானோ கருனாவை தோற்கடித்தார்.

இதன் மூலம் இந்தியாவின் குகேஷ் பெற்ற 2-வது வெற்றி இதுவாகும்.