தமிழ்நாட்டில் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல Test Center open பண்ணிட்டாங்களா..!!

தமிழ்நாட்டில் மறுபடியும் சிங்கப்பூர் செல்ல Test Center open பண்ணிட்டாங்களா..!!

தமிழ்நாட்டில் தற்பொழுது அதிகமாக பரவி வரும் ஒரு செய்தி  சிங்கப்பூர் செல்வதற்கான Skilled test centre மீண்டும் திறக்கப் போகிறார்கள் என்பது தான்.

இரண்டு வருடங்களுக்கு முன்பாகவே சிங்கப்பூரிலிருந்து டெஸ்ட் அடித்தவர்களை எடுக்கும் போக்கும் மிகவும் குறைவாக உள்ளது. இதனால் தமிழ்நாட்டில் உள்ள பல டெஸ்ட் சென்டர்கள் மூடிவிட்டார்கள்.

ஜனவரியிலிருந்து மீண்டும் டெஸ்ட் சென்டர்கள்  திறக்கப் போகிறார்கள் என்று சொல்லி வருகின்றனர்.

ஆனால் உண்மை நிலவரம் என்னவென்றால் தமிழ்நாட்டில் தற்பொழுதும் ஒரு சில டெஸ்ட் சென்டர்களில் மிகவும் சொற்பமான நபர்கள் பயிற்சி எடுத்துக் கொண்டு வெளிமாநிலங்களில் சென்று டெஸ்ட் அடித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

ஆனால் இரண்டு ஆண்டுகளுக்கு முன் இருந்தது போல் இல்லாமல் மிகவும் சொற்பமான எண்ணிக்கையிலே டெஸ்ட் அடிக்கிறார்கள்.

தற்போது வரை இந்த சூழ்நிலை மட்டுமே தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சிங்கப்பூரில் BCA இதைப் பற்றி அதிகாரப்பூர்வமாக எந்த தகவலும் வெளியிடவில்லை.

எனவே இதை யாரும் நம்ப வேண்டாம். சிங்கப்பூரிலிருந்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வந்தால் மட்டுமே டெஸ்ட் சென்டர்கள் ஓபன் செய்யப்படும்.

ஒரு சில ஏஜெண்டுகள் அவர்களின் சுயலாபத்துக்காக இது போன்ற வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதை நம்பி யாரும் பணம் கட்டி ஏமாற வேண்டாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK