சிங்கப்பூரில் ஆறு பேர் கைது..!! சட்டவிரோதமாக நுழைந்த நபர்கள்..!!

சிங்கப்பூரில் ஆறு பேர் கைது..!! சட்டவிரோதமாக நுழைந்த நபர்கள்..!!

இந்தோனேசியாவைச் சேர்ந்த ஆறு பேர் மரப்படகின் மூலமாக சிங்கப்பூரில் வேலை தேடி சட்டவிரோதமாக நுழைந்துள்ளனர்.

இதனை அறிந்த கடலோர காவல் படையினர் உடனடியாக அவர்களை பிடித்தனர்.

சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த காரணத்திற்காக குடி நுழைவு சட்டத்தின் கீழ் அவர்கள் ஆறு பேரையும் கடலோர காவல் படையினர் கைது செய்தனர்.

முதற்கட்ட விசாரணையின் போது ஆறு பேரும் சிங்கப்பூருக்கு வேலை தேடி வந்ததாக கூறினர்.

டிசம்பர் 21, 2025 நள்ளிரவு சுமார் 12:35 மணி அளவில் தானா மேரா கடற்கரையில் ஆறு பேரும் கடலோர காவல் படையினரால் பிடிபட்டது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் 22, 2025 அன்று கைது செய்த ஆறு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர்.

23 வயது முதல் 29 வயதிற்கு உட்பட்ட ஆறு பேர் என்பது குறிப்பிடத்தக்கது.

சட்டவிரோதமாக சிங்கப்பூருக்குள் நுழைந்த ஆறு பேருக்கும் ஆறு மாதங்கள் வரை சிறை தண்டனையும் மூன்று பிரம்படிகள் வழங்கப்பட்டு தீர்ப்பளிக்கப்பட்டது.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK