சட்டவிரோத சேவைகள்..? இனி சிங்கப்பூரில் கடும் நடவடிக்கை...!!!
சிங்கப்பூர்: சிங்கப்பூர் அரசு மற்றும் தள நிர்வாகிகள், சட்டவிரோத செயல்பாடுகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கையை தொடங்கியுள்ளனர். வெளிநாட்டினர் தங்கள் கணக்குகளை டெலிவரி பணிகளுக்கு பயன்படுத்த அனுமதித்த தள ஊழியர்கள் குறைந்தது 24 மாதங்களுக்கு அனைத்து தளங்களிலிருந்தும் தடை செய்யப்படுவார்கள்.
அதே நேரத்தில், சட்டவிரோத பாயிண்ட்-டு-பாயிண்ட் பயணிகள் சேவைகள் வழங்குபவர்கள் எதிர்காலத்தில் கடுமையான அபராதங்கள் மற்றும் சிறைத்தண்டனைகளை எதிர்கொள்ள நேரிடும். தற்போதைய விதிகள் படி, ஓட்டுநர்கள் $3,000 வரை அபராதம், ஆறு மாதங்கள் வரை சிறை அல்லது இரண்டும் எதிர்கொள்வார்கள். அவர்களின் வாகனங்களும் பறிமுதல் செய்யப்படும்.
தள ஆபரேட்டர்கள் நடவடிக்கைகள்:
🔶️ ஊழியர்கள் மற்றும் அவுட்சோர்ஸ் தொழிலாளர்களின் அடையாளங்களை சரிபார்த்தல்.
🔶️ கடுமையான திடீர் சோதனைகள்.
🔶️,அவுட்சோர்ஸ் பட்டியல்கள் மற்றும் ஆவணங்களை அரசாங்கத்திற்கு வழங்கல்.
💠 சட்டவிரோத சேவைகள் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் விளைவுகள் பற்றி அறிவிப்பு.
💠 சந்தேகத்திற்குரிய செயல்பாடுகள் குறித்து தனிப்பட்ட புகார் சேனல்கள்.
தள ஊழியர்களின் பாதுகாப்பு:
🔶️ ஊதியம், ஊக்கத்தொகை தொடர்பான தொழில்துறை கொள்கைகள் உருவாக்கம்.
🔶️ வருமான உறுதியற்ற தன்மை குறைப்பதற்கான வழக்கமான கூட்டங்கள்.
🔶️ ஊழியர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை முன்னுரிமைப்படுத்தல்.
🔶️ தெளிவான மற்றும் பாதுகாப்பான அவுட்சோர்சிங் நடைமுறைகள்.
பிளாட்ஃபார்ம் தொழிலாளர் முத்தரப்பு குழு, மூத்த அமைச்சர்கள், தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் தள நிர்வாகிகளுடன் இணைந்து, பத்து பரிந்துரைகளை முன்வைத்தது.ஏற்கனவே ஜூலை முதல், சட்டவிரோத எல்லை தாண்டிய பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கிய 73 வெளிநாட்டுப் பதிவு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.