அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்…!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!!

அதிகரிக்கும் மோசடிச் சம்பவங்கள்...!!!335 சந்தேக நபர்களிடம் விசாரணை..!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் மோசடி குற்றங்களில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் 335 பேர் விசாரிக்கப்படுகிறார்கள்.

இந்த மாதம் 9 ஆம் தேதி முதல் நேற்று முன்தினம் (மே 22) வரை இந்த சோதனைகள் நடத்தப்பட்டன.

16 முதல் 81 வயதுக்குட்பட்ட மொத்தம் 216 ஆண்களும் 119 பெண்களும் விசாரணைக்கு உதவி வருகின்றனர்.

சந்தேக நபர்கள் 850க்கும் மேற்பட்ட மோசடி சம்பவங்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் 15.4 மில்லியன் வெள்ளிக்கு அதிகமான பணத்தை இழந்ததாகக் கூறப்படுகிறது.

சந்தேக நபர்கள் மீதான விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.