இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!!

இந்திய விமானங்கள் பாகிஸ்தான் வான்வெளியில் பறக்க நீடிக்கும் தடை..!!!

பாகிஸ்தான் வான்வெளியில் இந்திய விமானங்கள் பறப்பதற்கான தடை மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட நெருக்கடியைத் தொடர்ந்து இந்தத் தடை நீட்டிக்கப்படுவதாக பாகிஸ்தான் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.

இந்தத் தடை முதன்முதலில் ஏப்ரல் 24 அன்று அறிவிக்கப்பட்டது. 

ஆனால் இப்போது அந்தத் தடை ஜூன் 24 அதிகாலை வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடை இந்திய இராணுவ விமானங்களுக்கும் பொருந்தும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் இந்திய கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரில் சுற்றுலாப் பயணிகள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குப் பிறகு இரு நாடுகளுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டது.

இந்தத் தாக்குதலுக்கு இஸ்லாமாபாத் தான் காரணம் என்று புது தில்லி குற்றம் சாட்டியது.

ஆனால் இஸ்லாமாபாத் அதை மறுத்து, சுயாதீன விசாரணையைக் கோரியது.