ஸ்கூட் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :

ஸ்கூட் விமான நிறுவனத்தில் வேலைவாய்ப்பு :

சிங்கப்பூர்: ஸ்கூட் விமான நிறுவனம் அதன் செயல்பாட்டு தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தீவிரமாக ஆட்சேர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது.

காரணம் அதன் விமான குழு மற்றும் வழித்தட வரையமைப்பை அதிகரிப்பதற்காக இருக்க கூடும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் மூலம் அதிகமான போக்குவரத்து திறனை செயல்படுத்த ஸ்கூட் நிறுவனம் தயாராகி வருகிறது.

இந்த ஆட்சேர்ப்பு பணியானது உள்நாடு மற்றும் வெளிநாட்டில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அதன் அடிப்படையில் 100 பைலட் பதவிகளை ஏர் இந்தியா விமானிகளுக்கு வழங்க திட்டமிட்டுள்ளது.

தனது செயல்பாட்டுத் திறனை அதிகரிக்கும் போது கூடுதல் மனித வளம் தேவைப்படும் என்பதற்காகவே இத்தகைய ஆட்சேர்ப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது .

இது குறித்து ஏர் இந்தியா தலைவர் வில்சன் கூறியதாவது, “இதன் மூலம் இரு விமான நிறுவனங்களுக்கும் இது ஒரு வெற்றி தரும் ஒப்பந்தமாக இருக்கக்கூடும்” என்று நம்புவதாக கூறினார்.