விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!!

விவாகரத்து வழக்கில் பெண்ணின் கோரிக்கையை நிராகரித்த நீதிபதி..!!

விவாகரத்துக் கோரிய பெண் ஒருவர் தனது முன்னாள் கணவரிடமிருந்து தனக்கு மாதாந்திர நிதி உதவியாக S$2,500 வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.

அந்தப் பெண் 2023 இல் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.

இந்நிலையில் மாதாந்திர நிதி உதவி கோரிக்கையை உயர் நீதிமன்ற நீதிபதி நிராகரித்துள்ளார்.அதே நேரத்தில், தம்பதியினர் திருமணமானபோது வைத்திருந்த சொத்துக்களில் முன்னாள் கணவரின் பங்கை நீதிபதி 10 சதவீதமாக குறைத்துள்ளார்.

திருமணத்தையும் சம்பந்தப்பட்ட பெண்ணின் நலனையும் குறைமதிப்பிற்கு உட்படுத்த அந்த நபர் தொடர்ந்து முயற்சித்ததை அடுத்து நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

அலுவலக உதவியாளராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணின் மாதச் சம்பளம் 2,340 வெள்ளி என்று கூறப்படுகிறது.

இதனால் அவர் தனது முன்னாள் கணவரிடமிருந்து அடிப்படை ஆதரவாக மாதத்திற்கு ஒரு வெள்ளி பெற உள்ளார்.

ஒரு மாவட்ட நீதிபதி இதற்கு முன்னர் அவ்வாறு தீர்ப்பளித்திருந்தார்.

ஒரு வெள்ளி என்பது, எதிர்காலத்தில் தனது முன்னாள் கணவரிடமிருந்து நிதி உதவிக்கு விண்ணப்பிக்கும் பெண்ணின் உரிமையைக் குறிப்பதாக வழக்கறிஞர் கூறினார்.

சிங்கப்பூர் ஆயுதப் படையில் முழுநேர தேசிய சேவையாளரான அவரது முன்னாள் கணவரின் மாதச் சம்பளம் S$5,212.2 என்று கூறப்படுகிறது.