கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!!

கேரளாவில் முன்கூட்டியே தொடங்கிய பருவ மழை..!!! பல்வேறு மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை..!!!

இந்தியாவின் கேரள மாநிலத்தில் பருவமழை வழக்கத்தை விட முன்னதாகவே தொடங்கியுள்ளது.

இந்தியாவில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. கடந்த ஒரு வாரமாக கேரளாவில் கனமழை தொடர்ந்து பெய்து வருகிறது.

இந்தியாவிற்கு பருவமழை விவசாயத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்.இது ஆறுகள், குளங்கள், அணைகள் போன்றவற்றையும் நிரப்புகிறது.

இந்தியாவின் பாதிக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் மழையையே பெரிதும் நம்பியுள்ளன.

கேரள மாநிலத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் கேரளா அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல மாவட்டங்களில் அடுத்த 3 நாட்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கையை விடுத்துள்ளது.

இதனால் குவார்ட்டர் மூடல் உள்ளிட்ட பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கேரள அரசு எடுத்துள்ளது.

அதிக கனமழை காரணமாக தாழ்வான பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்புள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், அத்தியாவசிய தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், பேரிடர் மீட்புப் படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.