சிறப்பு காவலர்களுக்கு ரூபாய் 30 லட்சம் கேட்கும் நயன்தாரா!
பிரபல பத்திரிகையாளர் அந்தணன் அளித்த பேட்டி ஒன்றில் நயன்தாரா பற்றிய ஒரு சில விஷயங்களை பகிர்ந்து உள்ளார்.
அதில்,நயன்தாராவுடன் படப்பிடிப்பிற்கு நிறைய பாதுகாவலர்கள் பாதுகாப்புக்காக வருகிறார்கள். அவர்களுக்கு துணையாக சிலர் வருகிறார்கள்.
இவர்களுக்கு செலவு மட்டுமே ரூபாய் 30 லட்சத்திற்கும் மேலாகிறது. இதற்கும் தயாரிப்பு நிறுவனம் தான் செலவு செய்கிறது. அப்படி செலவு செய்தும் நயன்தாராவை வைத்து எடுக்கும் சில படங்கள் சரியாக ஓடுவதில்லை.
அதனால்தான் தற்பொழுது நயன்தாராவிற்கு பதிலாக மற்ற நடிகைகளை தேர்வு செய்ய ஆரம்பித்து விட்டார்கள்.
ஈ படத்தின் போது நயன்தாரா ஒருவருடன் பழகி வந்தார் என் நேரமும் அவருடன் தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்ததால் படப்பிடிப்பிற்கு தாமதமானது. இதனால் கோபமான தயாரிப்பாளர் நயன்தாராவை கூப்பிட்டு நேரடியாக திட்டினார்.
அதன் பின் நயன்தாரா நேரத்திற்கு படப்பிடிப்பிற்கு வந்து படத்தை நடித்து முடித்தார்.
அண்மையில் நயன்தாரா சொல்லும் அனைத்தையும் தயாரிப்பாளர்கள் செய்யத் தொடங்கியதால் தற்பொழுது எல்லை மீறி நடந்து கொள்கிறார்.
அவருக்கு பாதுகாப்பாக வருபவர்களுக்கும் சேர்த்து சம்பளம் கேட்பதால் தயாரிப்பாளர்களை அவரை ஒதுக்கி மற்ற நடிகைகள் பக்கம் செல்கிறார்கள் என்று அந்தணன் தெரிவித்துள்ளார்.