சிங்கப்பூர் மருத்துவமனையில் ஓ. பன்னீர்செல்வம் அனுமதி!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

சிங்கப்பூர் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதி!! ஏன் என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுவதுமாக படிக்கவும்!!

முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சிங்கப்பூர் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக தமிழக ஊடகங்களில் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது போடிநாயக்கனூர் சட்டமன்ற உறுப்பினராக உள்ள பன்னீர்செல்வம் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து பல்வேறு சட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்.

இந்த நிலையில் அவர் உடல்நல பரிசோதனைக்காக ஜூன் 19ஆம் தேதி சென்னையில் இருந்து சிங்கப்பூர் புறப்பட்டதாக கூறப்படுகிறது.

அவர் ஒரு வார காலம் சிங்கப்பூரிலேயே தங்கியிருந்து வழக்கமான மருத்துவ பரிசோதனைகளை மேற்கொள்வார் என்று அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.