சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!!

சிங்கப்பூர் தேர்தலில் அமோக வெற்றி பெற்ற மக்கள் செயல் கட்சி..!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூர் பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி (PAP) 65.57% வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது.

மக்கள் செயல் கட்சி மொத்தம் உள்ள 97 இடங்களில் 87 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.

இந்நிலையில் புதிய அமைச்சரவை விரைவில் அறிவிக்கப்படும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் அறிவித்துள்ளார்.

மேலும் நடந்து முடிந்த பொதுத் தேர்தல் முடிவுகள் மகிழ்ச்சியையும் நிம்மதியையும் அளிப்பதாக மூத்த அமைச்சர் லீ சியென் லூங் தெரிவித்துள்ளார்.

பிரதமர் லாரன்ஸ் வோங்கிற்கு நல்ல ஆதரவு கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இது உலகிற்கும் சிங்கப்பூருக்கும் ஒரு முக்கியமான நேரம் என்று கூறினார்.

எதிர்வரும் சவால்களை சமாளிக்க அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவது முக்கியம் என்பதை சிங்கப்பூரர்கள் புரிந்துகொள்கிறார்கள் என்று திரு.லீ தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்தார்.

திரு.வோங் மற்றும் அவரது 4வது தலைமுறை குழுவிற்கு சிங்கப்பூரர்கள் தெளிவான ஆதரவை வழங்கியுள்ளதாக திரு. லீ கூறினார்.