அமெரிக்காவில் ஹெலிகாப்டருடன் மோதிய விமானம்!! ஆற்றில் விழுந்த விமானம்!! பயணிகளின் கதி?
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று வாஷிங்டன் டிசியின் ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தை நெருங்கும் போது ஹெலிகாப்டருடன் மோதி விபத்துக்குள்ளானது.இந்த தகவலை BBC செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
விமானம் கன்சஸ் மாநிலத்தின் விசித்தா நகரில் இருந்து வந்து கொண்டிருந்தது.
அந்த விமானம் Potomac ஆற்றில் விழுந்தது.அந்த பகுதிக்கு தேடுதல் மற்றும் மீட்புப் படகுகள் அனுப்பப்பட்டுள்ளதாக BBC செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
ரொனால்ட் ரேகன் தேசிய விமான நிலையத்தில் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
அமெரிக்கன் ஏர்லைன்ஸ் விமானம் விசித்தா மாநிலத்தில் இருந்து சுமார் 60 பயணிகளுடன் புறப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் இரவு 9 மணியளவில் வாஷிங்டன் விமான நிலையத்தை நெருங்கும் போது ராணுவ ஹெலிகாப்டர் மீது மோதி விபத்து நேர்ந்ததாக பெடரல் ஏவியேஷன் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ராணுவ ஹெலிகாப்டரில் மூன்று வீரர்கள் இருந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அதில் எந்த விஐபிகளையும் ஏற்றிச் செல்லவில்லை என்று பாதுகாப்பு அதிகாரி ஒருவர் CNN யிடம் கூறினார்.