மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியாவின் சபாவில் கடும் வெள்ளம் – 5,000 மக்கள் அவதி..!

மலேசியா: மலேசியா நாட்டின் சபா மாநிலத்தில் பெய்து வரும் தொடர் கனமழையால் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக சுமார் 5,000க்கும் மேற்பட்டோர் தங்களது வீடுகளை விட்டு பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பல கிராமங்கள் முழுமையாக நீரில் மூழ்கியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.இந்த நிலைமை தொடர்பாக மலேசியத் துணைப் பிரதமர் அஹமது ஸாஹித் ஹமிடி அவசர ஆலோசனை நடத்தினார்.

அரசாங்கத்தின் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்பட்டு வருவதாகவும், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உடனடி உதவி வழங்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராமவாசிகளை மீட்க அவசரகால மீட்புப் படைகள் தீவிரமாக பணியாற்றி வருகின்றன. படகுகள் மற்றும் சிறப்பு வாகனங்கள் மூலம் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்படுகின்றனர்.

சில பகுதிகளில் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் மீட்பு பணிகள் சவாலாக உள்ளன.
பாதிக்கப்பட்ட மக்களை தங்க வைப்பதற்காக 18 தற்காலிக நிவாரண முகாம்கள் திறக்கப்பட்டுள்ளன.அங்கு உணவு, குடிநீர், மருத்துவ வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் வழங்கப்பட்டு வருகின்றன. அதிகாரிகள் தொடர்ந்து நிலைமையை கண்காணித்து வருகின்றனர்.

புனித ரமலான் மாதம் நடைபெற்று வரும் நிலையில், வெள்ளத்தால் சிரமப்படும் மக்களுக்கு உடனடி உதவிப் பொருட்கள் வழங்கும்படி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நோன்பு நோற்கும் மக்களுக்கு சிறப்பு உணவுப்பொருட்களும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சரவாக் மற்றும் சபா மாநிலங்களில் வாரம் முழுவதும் கடும் மழை தொடரும் என மலேசிய வானிலை ஆய்வகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுவரை ஏற்பட்ட வெள்ளங்களில் இது மிகவும் மோசமானதாகும் என குடியிருப்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.இச்சம்பவத்தில் உயிரிழப்பு எதுவும் ஏற்படவில்லை.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK