பாலித்தீவிற்குள் போதை பொருள் கடத்திய ஆஸ்திரேலியருக்கு தூக்கு தண்டனையா..??
இந்தோனேசியாவின் பாலித் தீவிற்குள் போதைப்பொருள் கடத்த முயன்றதாக குற்றம் சாட்டப்பட்ட ஆஸ்திரேலியர் ஒருவருக்கு மரண தண்டனை அல்லது ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் 1.7 கிலோ கொக்கேய்ன் கடத்தியதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.
அவர் சிட்னியைச் சேர்ந்த 43 வயது மதிக்கத்தக்க நபர் என்று கூறப்படுகிறது.
அவர் தங்கி இருந்த வாடகை வீட்டை அதிகாரிகள் சோதனையிட்டதில் போதை பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
அவரிடமிருந்து போதைப்பொருள் உட்பட வேறு சில பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டன.