சிங்கப்பூர் : பொங்கோல் பகுதியில் உள்ள கழக வீட்டில் ஜனவரி 26 ஆம் தேதி (இன்று) தீ விபத்து ஏற்பட்டது.பிளாக் 224A,சுமாங் லேனில் உள்ள வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது.சிங்கப்பூர் குடிமைத் தற்காப்பு படைக்கு காலை சுமார் 5 மணியளவில் தகவல் வந்ததாக முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டது .
7 வது மாடியில் இருக்கும் வீட்டின் படுக்கையறையில் தீப்பிடித்தது.
சம்பவ இடத்திற்கு பொங்கோல் ,செங்காங்,தெம்பனீஸ் நிலையங்களைச் சேர்ந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்தனர்.