சிங்கப்பூர் ராட்டினம் தொழில்நுட்ப கோளாறு காரணமாக தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
சிங்கப்பூர் ராட்டினத்தின் சக்கரத்தில் வழக்கமான பராமரிப்பு ஆய்வு மேற்கொண்டு இருக்கும்போது இந்த பிரச்சனை உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தகவலை சிங்கப்பூர் ஃப்ளையரின் ஆபரேட்டரான ஸ்ட்ராகோ லீஷர் தெரிவித்துள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சக்கரம் தற்பொழுது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
சக்கரத்தில் ஏற்பட்டுள்ள தழுவினை குழு தற்போது கட்டிடம் மற்றும் கட்டுமான ஆணையத்துடன் கலந்து பணியாற்றி வருகிறது. ஃப்ளையரில் அமைந்துள்ள கடைகள் மற்றும் உணவகங்கள் திறந்து இருக்கும்.
டிக்கெட்டுகளை முன்பதிவு செய்துள்ள பொதுமக்கள் வாடிக்கையாளர் சேவை குழுவினைத் தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.