நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு…!!!

நண்பர்களுடன் உற்சாகமாக பயணம் செய்த சிங்கப்பூரர் உயிரிழப்பு...!!!

மலேசியாவில் லாரி மோதியதில் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சிங்கப்பூர் நபர் ஒருவர் உயிரிழந்தார்.

கூலாயில் உள்ள புலாய் மலைப்பகுதியில் நேற்று (ஜூன் 14) காலை இந்த விபத்து நடந்தது.

அந்த நபர் தனது சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது ஒரு பள்ளத்தில் தடுமாறி கீழே விழுந்தார்.

பின்னர் அவர் மீது ஒரு லாரி மோதியது.

அந்த நபரும் அவரது மூன்று நண்பர்களும் சிங்கப்பூரிலிருந்து மலேசியாவுக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது இந்த விபத்து நிகழ்ந்ததாக கூலாய் போலீசார் தெரிவித்தனர்.

தலையில் பலத்த காயம் அடைந்த அந்த நபர் நெடுஞ்சாலையில் இறந்தார்.

41 வயதான லாரி ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

அந்த நபரின் உடல் கூலாய் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது.

மேலும் இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்தனர்.