அமெரிக்காவில் சட்டவிரோத குடியேறிகளை நாடு கடத்தும் நடவடிக்கை தீவிரம்..!!
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த 131 மத்திய ஆசிய குடியேறிகள் உஸ்பெகிஸ்தானுக்கு நாடு கடத்தப்படுவதாக அமெரிக்க உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நாடுகடத்தப்பட்டவர்கள் உஸ்பெகிஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் கஜகஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் என்று அமைச்சகம் புதன்கிழமை (ஏப்ரல் 30) தெரிவித்தது.
அவர்கள் புதன்கிழமை அமெரிக்காவிலிருந்து நாடு கடத்தப்பட்டதாகக் கூறியது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ள மில்லியன் கணக்கான குடியேறிகளை நாடு கடத்துவதாக அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்ப் தெரிவித்ததையடுத்து இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
“எங்கள் பரஸ்பர பாதுகாப்பை மேம்படுத்தவும் சட்டத்தின் ஆட்சியை நிலைநிறுத்தவும் உஸ்பெகிஸ்தானுடன் தொடர்ந்து பணியாற்ற நாங்கள் எதிர்நோக்குகிறோம்” என்று உள்துறை அமைச்சர் கிறிஸ்டி நோயம் கூறினார்.
அமெரிக்கா சமீபத்தில் கூட ஒரு ஈராக் நாட்டவரை ருவாண்டாவிற்கு அனுப்பியது.
மேற்கு அரைக்கோளத்தில் உள்ள மூன்றாம் உலக நாடுகளுக்கு குடியேறிகளை நாடு கடத்த டிரம்ப் நிர்வாகம் புதிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.