HDB குறுகிய கால திட்ட வவுச்சரை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் நீட்டிக்கிறது.

HDB குறுகிய கால திட்ட வவுச்சரை வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் நீட்டிக்கிறது.

வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம்  தற்காலிக வீட்டு வசதி திட்ட வவுச்சரை இந்த ஆண்டு டிசம்பர் 31 வரை ஆறு மாதங்களுக்கு நீட்டிப்பதாக அறிவித்துள்ளது.

நீட்டிக்கப்பட்ட திட்டத்தின் மூலம் சுமார் 200 குடும்பங்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய HDB அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு விண்ணப்பித்த இளம் தம்பதிகள் மற்றும் குடும்பங்கள் திறந்த சந்தையில் வாடகைக்கு எடுக்கும் போது குறுகிய கால மானியங்களை பெற உதவுவதே இந்த திட்டத்தின் நோக்கம் ஆகும். தகுதி உள்ள குடும்பங்களுக்கு மாதம் 300 சிங்கப்பூர் டாலர் கிடைக்கும்.

புதிய HDB பிளாட்டுகளின் விநியோகத்தில் ஏற்பட்ட அதிகரிப்புடன்.முதல் முறையாக HDB பிளாட்டுகளுக்கு விண்ணப்பிக்கும் குடும்பங்களின் விண்ணப்ப விகிதம் 2019ல் 3.7 மடங்கில் இருந்து 2025 பிப்ரவரி விற்பனை நடவடிக்கையில் 1.5 மடங்காக குறைந்துள்ளது.

குடும்பங்களுக்கான சராசரி காத்திருப்பு நேரம் 4 ஆண்டுகளுக்கு குறைவாக குறைக்கப்பட்டுள்ளது. இது கோவிட்-19 தொற்று நோய்க்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடத்தக்கது.


தற்பொழுது கட்டுமானத்தில் உள்ள அனைத்து புதிய HDB திட்டங்களும் சரியான நேரத்தில் வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan