ஹைஃபிளக்ஸ் நிறுவன வழக்கு மீண்டும் இன்று தொடக்கம்..!!!
சிங்கப்பூர்: தற்போது செயல்படாத உள்நாட்டு நீர் சுத்திகரிப்பு நிறுவனமான ஹைஃபிளக்ஸ் இன் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஒலிவியா லம் ஓய் லின்னின் முன்னணி பாதுகாப்பு வழக்கறிஞர், நேற்று திங்கள்கிழமை (ஆகஸ்ட் 11ஆம்) தேதி நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் மீதான விசாரணையை அவர் கையாண்ட விதம் குறித்து அதிகாரியிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இரண்டு முக்கிய பொது அறிக்கையைகளில் ஹை ஃபிளாக்சன் துவாஸ்ப்ரிங் திட்டம் குறித்த மின்சார விற்பனை தொடர்பான தகவல்களை 2011 ஆம் ஆண்டில் வெளியிட்டதற்காக 64 வயதான லம், பத்திரங்கள் மற்றும் எதிர்கால சட்டத்தின் கீழ் இரண்டு குற்றச்சாட்டுகளுக்காக விசாரணை உட்படுத்தப்பட்டார்.
2011 ஆம் ஆண்டில், தற்போது PUB என்று அழைக்கப்படும் பொதுப் பயன்பாட்டு வாரியத்தால் நடத்தப்பட்ட டென்டருக்கு பதில் அளிக்கும் விதமாக, ஹைஃபிளக்ஸ் நிறுவனம் இந்த திட்டத்திற்கான ஏலத்தை வெற்றிகரமாக மேற்கொண்டது.
தேசிய நீர் நிறுவனமான PUB க்கு மிகக்குறைந்த விலையில் தண்ணீரை விற்பனை செய்வதற்கு நிதி அளிப்பதாகவும் அது கட்டும் மின் உற்பத்தி நிலையத்திலிருந்து மின்சாரத்தை விற்பனை செய்யும் புதிய வணிகத்துடன் செயல்படுவதாகவும் ஹைஃப்ளக்ஸ் நிறுவனம் அறிவிப்பை வெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஹைஃளக்ஸ் நிறுவனம் விலையில் வீழ்ச்சி அடைந்தது. நிறுவனத்தின் சரிவு முதலீட்டாளர்களுக்கு இழப்புகளை ஏற்படுத்தியது.
PUB எனும் தேசிய தண்ணீர் அமைப்புக்கு மிக குறைந்த விலையில் தண்ணீர் விற்க போவதாக ஹை ஃபிளக்ஸ் நிறுவனம் முன்னதாகவே அறிவிப்பை வெளியிடவில்லை. மேலும், மின் உற்பத்தி நிலையம் ஒன்றை நிறுவி மின்சாரம் விற்கப் போவதையும் வெளியிடவில்லை.
இதன் அடிப்படையில் வழக்கு தொடரப்பட்டதால் நேற்று (ஆகஸ்ட்11 ஆம் தேதி) விசாரணைக்கு வந்த நிலையில் ஹைஃபிளக்ஸ் நிறுவனம் முதலீட்டாளர்களுக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. இதனால் சுமார் 34,000 பேர் பாதிக்கப்பட்டனர். மேலும் நிறுவனத்திற்கு கிட்டத்தட்ட $900 மில்லியன் வெள்ளி கடனை ஏற்பட்டுள்ளது. இதனால் ஹைஃபிளக்ஸ் நிறுவனத்தின் தலைமை அதிகாரி ஒலிவியா லம் நொடித்துப்போனார்.