சிங்கப்பூர் – மலேசியா சோதனைச் சாவடிகளை கடப்பதில் தாமதம் ஆகலாம்..!!என்ன காரணம்..??

சிங்கப்பூர் - மலேசியா சோதனைச் சாவடிகளை கடப்பதில் தாமதம் ஆகலாம்..!! என்ன காரணம்..??

சிங்கப்பூரில் அடுத்த மாதம் பள்ளி விடுமுறை 13ஆம் தேதியிலிருந்து 22ஆம் தேதி வரை நீடிக்கும்.

அதுமட்டுமில்லாமல் நோன்புப் பெருநாள் 21ஆம் தேதி வருகிறது.

அரபு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் பதட்டத்தால் அனைத்து நாடுகளும் தங்களுடைய சோதனைச் சாவடிகளில் சோதனைகளை வலுப்படுத்தி உள்ளது.

இந்த நிலையில் சிங்கப்பூரும் சோதனைகளை வலுப்படுத்தி உள்ளதாக ஆணையம் சொன்னது.

இந்த நிலையில் பயணிகள் குடிநுழைவு நடைமுறைகளை முடிக்க கூடுதல் நேரம் பிடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சோதனைச் சாவடிகளில் உள்ள போக்குவரத்து நிலவரத்தை சரி பார்த்துவிட்டு பயணம் மேற்கொள்ளும்படி குடி நுழைவு சோதனை ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

போக்குவரத்து நிலவரத்தை பற்றி அறிந்து கொள்ள பயணிகள் one motoring இணையதளம் அல்லது குடி நுழைவு சோதனை சாவடிகள் ஆணையத்தின் சமூக ஊடகத் தளங்களை நாடலாம்.

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK