இந்நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படாத நிலையில், இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய அணியில் யார் அற்புதமான வீரர் என்பது குறித்து பல்வேறு முன்னாள் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் நிச்சயம் அசத்துவார் என தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் வீரர் ஏ.பி.டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
சாம்பியன்ஸ் டிராபி தொடரில் விளையாடும் இந்திய அணியில் குல்தீப் யாதவ் நிச்சயம் இடம் பெறுவார். எனவே அவர் இந்திய அணிக்கு நிச்சயம் பலம் சேர்க்கும் முக்கிய வீரராக இருப்பார் என நினைக்கிறேன் என்று கூறியுள்ளார்.
ஏனெனில் இது துபாயில் உள்ள மைதானங்களில் விளையாடப்படுகிறது. அந்த மைதானம் சுழற்பந்து வீச்சாளர்களின் மைதானமாக இருந்தால் நிச்சயம் அவர் அங்கு சிறப்பாக செயல்பட முடியும். ஆடுகள நிலவரத்தை புரிந்து கொண்டு நிச்சயம் சிறப்பாக விளையாடுவார் என டி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.
காயம் காரணமாக சமீபகாலமாக இந்திய அணியில் இடம்பிடிக்க முடியாமல் தவித்து வரும் குல்தீப் யாதவ், இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணிக்காக விளையாடவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.