சிங்கப்பூர்: சாங்கி விமான நிலையத்திலிருந்து பெர்த் செல்லும் விமானத்தை விபத்துக்குள்ளாக்கப் போவதாக மிரட்டிய ஆஸ்திரேலிய பயணி ஒருவருக்கு 8 வாரச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு நவம்பர் 20 ஆம் தேதி,36 வயதான மார்லி கர்டிஸ் பிலிப் மொன்கிரஃப் சிங்கப்பூரிலிருந்து புக்கெட்டிற்குச் செல்ல திட்டமிட்டிருந்தார்.
பாஸ்போர்ட்டில் விசா அடங்கிய ஒரு பக்கம் கிழிந்ததால் தாய்லாந்து அதிகாரிகள் அவரை புக்கெட்டிற்குள் நுழைவதற்கு மறுத்துவிட்டனர்.
அதனால் அவர் சிங்கப்பூர் திரும்பினார்.
ஆனால் சிங்கப்பூர் அதிகாரிகளும் அதே காரணத்திற்காக நாட்டிற்குள் நுழைய மறுத்தனர்.