அமெரிக்காவும் சீனாவும் வரித் திட்டங்களை ஒத்திவைத்ததால் பங்குச் சந்தைகள் மீட்சி...!!!

அமெரிக்காவும் சீனாவும் தங்கள் வரித் திட்டங்களை 90 நாட்களுக்கு ஒத்திவைத்த பிறகு பங்குச் சந்தைகள் மீண்டுள்ளன.
சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பிறகு, அமெரிக்காவும் சீனாவும் இந்த கட்டணத் திட்டங்களை ஒத்திவைக்க ஒப்புக்கொண்டன.
சீனாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கான வரியை 145 சதவீதத்திலிருந்து 30 சதவீதமாகக் குறைக்க அமெரிக்கா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்கப் பொருட்கள் மீதான அதன் 125 சதவீத வரியை 10 சதவீதமாகக் குறைக்க சீனா ஒப்புக்கொண்டுள்ளது.
அமெரிக்காவில் பொருளியல் மந்தநிலை ஏற்படுவதற்கான வாய்ப்பு தற்போது குறைவாக இருப்பதாக முதலீட்டாளர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கடந்த மாதம் 3,500 அமெரிக்க டாலர்களை எட்டிய ஸ்பாட் தங்கத்தின் விலைகள் தற்போது 2.7 சதவீதம் சரிந்து ஒரு அவுன்ஸ் 3,234.8 அமெரிக்க டாலர்களாக இருக்கிறது.
மார்ச் மாதத்திலிருந்து S&P 500 இன் பங்குகள் மூன்று சதவீதத்திற்கும் மேலாக உயர்ந்துள்ளது.
டவ் ஜோன்ஸ் தொழில்துறை சராசரி 1,100 புள்ளிகள் உயர்ந்தது. நாஸ்டாக் பங்குகள் 4 சதவீதம் வரை உயர்ந்தன.
ஐரோப்பாவின் பிராந்திய STOXX 600 கடைசியாக 1.2 சதவீதம் உயர்ந்து வர்த்தகமானது.
ஹாங்காங்கின் ஹேங் செங் குறியீடு கிட்டத்தட்ட 3 சதவீதம் வரை உயர்ந்தன.
இருப்பினும் விநியோகத் தொடர்களில் ஏற்பட்டுள்ள இடையூறுகள், நிறுவனங்களின் வருமானம் ஆகியவற்றால் எழுந்துள்ள கவலைகளை வரி ஒத்திவைப்பு முழுமையாகத் தணிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
