தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட “தாயம்” விளையாட்டுப் போட்டி…!!

தமிழ் ஆர்வத்தை அதிகரிக்க இளைஞர்களுக்கு நடத்தப்பட்ட “தாயம்” விளையாட்டுப் போட்டி...!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் ‘தமிழா’ அமைப்பைச் சேர்ந்த இளம் மாணவர்கள், தமிழ் இலக்கியம், கலைகள், பொது அறிவு மற்றும் பாரம்பரியத்தை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லும் சுவாரஸ்யமான பணியை மேற்கொண்டனர்.

இந்த அமைப்பு தமிழுக்கு பங்களிப்பு செய்வது மட்டுமல்லாமல், மொழி மற்றும் பாரம்பரியம் தொடர்பான போட்டிகளையும் ஏற்பாடு செய்கிறது.

சமீபத்தில், அவர்கள் நான்கு பிரிவுகளில் ‘தாயம்’ விளையாட்டுப் போட்டியை ஏற்பாடு செய்தனர்.

தேசிய நூலகத்தின் ஆதரவுடன் மூன்றாவது முறையாக நடத்தப்பட்ட இந்தப் போட்டி, ஞாயிற்றுக்கிழமை (மே 25) உட்லேண்ட்ஸ் பிராந்திய நூலகத்தில் நடைபெற்றது.

மாணவர்களின் மொழித் திறனைச் சோதிக்க,முதல் சுற்றில், பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த 36 இளைஞர்கள், மூன்று பேர் கொண்ட 12 குழுக்களாகப் பிரிக்கப்பட்டனர்.

இலக்கியம், கலைகள், பொது அறிவு, பாரம்பரியம் போன்ற தலைப்புகளில் கேள்விகள் கேட்கப்பட்டன.

முதல் சுற்றில் வெற்றி பெற்ற நான்கு அணிகள் அரையிறுதிக்குத் தகுதி பெற்றன.அதிலிருந்து இரண்டு அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறின.

இறுதிச் சுற்றில் வெற்றி பெற்ற அணிக்கு $250 பரிசு வழங்கப்பட்டது.

இம்மாதிரியான நடவடிக்கைகள் மூலம் இளைஞர்களிடையே தமிழ் ஆர்வத்தை வளர்க்க முடிவதாக நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் கூறினர்.

Follow us on : click here 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan