உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து – கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!

உட்லண்ட்ஸில் பயங்கர விபத்து..! SMRT பேருந்து - கார் மோதல்… 5 பேர் மருத்துவமனையில்..!

சிங்கப்பூர் உட்லண்ட்ஸ் அவென்யூ 2 இல் SMRT பேருந்தும் காரும் மோதிக்கொண்டதில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் 62 டிரைவ், உட்லண்ட்ஸ் லூப் ரோடு மற்றும் உட்லண்ட்ஸ் 64 டிரைவ் சந்திப்பில், நேற்று (ஜூலை 15) காலை சுமார் 8:00 மணி அளவில் ஒரு விபத்து நிகழ்ந்துள்ளதாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உட்லண்ட்ஸ் அவென்யூ 2இல் நேராக சென்று கொண்டிருந்த SMRT பேருந்து, அங்கு வளைந்து வந்த கார் மீது மோதி விபத்துக்குள்ளானது.

பேருந்தில் இருந்தால் மற்ற பயணிகள் உடனடியாக மற்றொரு பேருந்து மூலம் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டனர்.

விபத்தில் காயம் அடைந்த 58 வயதான கார் ஓட்டுநர், 45 வயதான பெண் ஓட்டுநர் மற்றும் 3 பயணிகள் உட்பட 5 பேரும் சுயநினைவுடன் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக சிங்கப்பூர் குடிமைப் பாதுகாப்புப் படையினர் தெரிவித்தனர்.

விபத்தில் காயம் அடைந்தவர்கள் அனைவரும் 25 வயது 58 வயதுக்குட்பட்டவர்கள் ஆவர்.

விபத்தில் காயமடைந்தவர்களைத் தொடர்புகொண்டு, அவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக SMRT நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் இந்த விபத்து தொடர்பாக காவல்துறையினர் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.