சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!!

சிங்கப்பூரில் புதிய திட்டம் அறிமுகம்-பொது சுகாதார கவுன்சில்!!

கடந்த ஜூலை 31, 2025 காலை “பயிற்சியாளர்களுக்கான பயிற்சி” என்னும் திட்டத்தை சிங்கப்பூர் பொது சுகாதார கவுன்சில், 60 பெரு நிறுவன தூய்மை பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் நோக்கத்தோடு கிழக்கு கடற்கரை பூங்காவில் தி கிரேட் ஓஷன் டேஷூடன் இணைந்து தொடங்கியது.

இத்திட்டத்தின் கீழ் கடற்கரை சுத்தம் செய்தல் மற்றும் சுற்றுச்சூழல் கல்வி மூலமாக கடல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பிரபலமான கார்ட்டூன் கதாபாத்திரமான SpongeBob SquarePants ஐ மையமாகக் கொண்டு இந்நிகழ்வு நடைபெற்றது.

இத்திட்டத்திற்கான விளம்பர நிகழ்வு மற்றும் குப்பைகளை சேகரிப்பதற்கான நடவடிக்கை கிழக்கு கடற்கரை பூங்காவில் நடத்தப்பட்டது. மேலும் இந்நிகழ்வில் 35 பேர் பங்கேற்று 24 கிலோகிராம் குப்பைகளை சேகரித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த பயிற்சி காலம் 2025 ஜூலை முதல் செப்டம்பர் வரை நடைபெறும். மேலும், பயிற்சி முடிந்ததும் “சுத்தமான முன்னோடி” என்ற சான்றிதழ் வழங்கப்படும்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பை மேம்படுத்துவதற்காக பொது சுகாதார கவுன்சிலின் ஒத்துழைப்பு கணிசமான உறுதிப்பாட்டை வெளிப்படுத்துகிறது என SMF தலைவர் மாக் எங் லியாங் கூறினார்.

இத்திட்டம் குறித்து பொது சுகாதார கவுன்சில் தலைவர் ஆண்ட்ரூ கிங் கூறியதாவது: சிங்கப்பூருக்கு 60 தூய்மை தூதர்களுக்கு பயிற்சி அளிப்பதே எங்கள் குறிக்கோள்.

மக்கள் சுயமாக தங்கள் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பொறுப்பாக நிறைவேற்ற இத்திட்டம் உதவும் மேலும், இது ஒரு ஓட்டம் மட்டும் அல்ல, ஒரு தேசிய கடல் பாதுகாப்பு இயக்கமும் ஆகும் என்று “Ocean Protection Sprint” இன் அமைப்பாளர் பிரதிநிதியாகிய Feng Aijiao கூறியுள்ளார்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan