அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!!

அமெரிக்காவில் 115 மீட்டர் உயர பள்ளத்தாக்கில் விழுந்த பூனை உயிர் தப்பிய அதிசயம்..!!!

அமெரிக்காவில் 115 மீட்டர் உயரமுள்ள மலையிலிருந்து விழுந்த பூனை ஒன்று அதிசயமாக உயிர் பிழைத்துள்ளது.

இந்த சம்பவம் யூட்டாவில் உள்ள பிரைஸ் கேன்யன் தேசிய பூங்காவில் நடந்தது.

கணவன் மனைவி மற்றும் அவர்களது பூனை பள்ளத்தாக்கில் இருந்து விழுந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்தனர்.

புதன்கிழமை கார்பீல்ட் கவுண்டி ஷெரிப் அலுவலகம் இறந்தவர்களை மேத்யூ நன்னன் 45 மற்றும் பெய்லி கிரேன் 58 என்பதை அடையாளம் கண்டுள்ளது.

இறந்த தம்பதியினருக்கு அருகில் பூனை உயிருடன் மீட்கப்பட்டுள்ளது.

பூனை ஒரு கருப்பு பைக்குள் இருந்ததாகக விலங்கு பாதுகாப்பு அமைப்பு கூறியது.

தற்போது மிராஜ் என்று பெயரிடப்பட்ட பூனை பத்திரமாக விலங்கு காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பூனை ஆரோக்கியத்துடன் இருப்பதாகவும் 12 வயது மதிக்கத்தக்க பூனை தற்போது நலமுடன் இருப்பதாகவும் அமைப்பு தெரிவித்துள்ளது.