காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!!

காலாங் MRT நிலையம் அருகே விபத்து..!!!டாக்சி ஓட்டுநர் கைது..!!

சிங்கப்பூர்:காலாங் எம்ஆர்டி நிலையம் அருகே செவ்வாய்க்கிழமை (ஜூன் 10) கம்ஃபர்ட்டெல்குரோ டாக்சி மோதியதில் 85 வயது மூதாட்டி ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கவனக்குறைவாக வாகனம் ஓட்டி மரணத்தை ஏற்படுத்தியதற்காக 68 வயது டாக்சி ஓட்டுநர் கைது செய்யப்பட்டதாக போலீசார் புதன்கிழமை தெரிவித்தனர்.

செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணி அளவில் அப்பர் பூன் கெங் சாலைக்குச் செல்லும் லோரோங் 1 கேலாங்கில் நடந்த விபத்து குறித்து போலீசாருக்குத் தகவல் கிடைத்தது.

சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையினரால் டான் டோக் செங் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோது சுயநினைவின்றி இருந்த மூதாட்டி பின்னர் உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.