குழந்தைகளுக்கு வித்தியாசமான பெயர் வைக்க தடை...!!! எங்கு...???

பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்கு வேறு யாரும் நினைத்துப் பார்க்காத ஒரு தனித்துவமான பெயரை வைக்க வேண்டும் என்று நினைப்பதுண்டு.
அதற்காக பெற்றோர்கள் சரியாக உச்சரிக்க கூட முடியாத அளவிற்கு ஒரு தனித்துவமான பெயரை வைப்பார்கள்.
இம்மாதிரியான யோசனைகளுக்கு ஜப்பான் அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
ஜப்பானிய அரசு குழந்தைகளுக்கு அசாதாரண பெயர்களை வைப்பதை தடை செய்துள்ளது.
சமீப காலமாக, ஜப்பானிய இலக்கணத்தின்படி உச்சரிக்க முடியாத பெயர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இது பள்ளிகளிலும் சமூகத்திலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது
ஜப்பானில் இனி பதிவு செய்யப்படும் குழந்தைகளின் பெயர்களை எப்படி உச்சரிப்பது என்பதை விளக்குமாறு அதிகாரிகள் பெற்றோரிடம் கேட்பார்கள்.
பெயர் எழுதப்பட்ட விதத்திற்கும் அதன் உச்சரிப்புக்கும் இடையில் முரண்பாடு இருந்தால், பெற்றோர்கள் சட்ட விவகார அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan