சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பை பயன்படுத்தி போலி மோசடி!! யாரும் ஏமாற வேண்டாம்!!
சிங்கப்பூரில் தேசிய தின அணிவகுப்பை பயன்படுத்தி போலி மோசடி!! யாரும் ஏமாற வேண்டாம்!!எந்த மாதிரியான மோசடி என்று தெரிந்து கொள்ள இந்த பதிவை முழுமையாக படிக்கவும்!!
தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டு குழுவினர் மோசடி அழைப்புகள் குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
இது போன்று வந்த அழைப்பில் தேசிய தின அணிவகுப்பு ஏற்பாட்டுக் குழுவின் பிரதிநிதி போல் பேசும் மோசடிக்காரர்கள் அணிவகுப்பிற்கு நிதி போதவில்லை என்றும் நிதி ஆதரவு தாருங்கள் என்றும் கேட்கின்றனர்.
அவ்வாறு கேட்டு சம்பந்தப்பட்டவரின் தனிப்பட்ட தகவல்களை அவர்கள் திருடுவதாக புகார்கள் வந்துள்ளது.
எனவே பொதுமக்கள், அழைப்பவர்களைப் பற்றிய முழு விவரம் தெரியாமல் அவர்களின் தனிப்பட்ட தகவல்களை கொடுக்க வேண்டாம் என்று ஏற்பாட்டுக் குழுவினர் அறிவுறுத்தி உள்ளனர்.
இது போன்ற அழைப்புகளால் யாரேனும் பாதிக்கப்பட்டிருந்தால் உடனடியாக காவல்துறையில் புகார் தெரிவிக்கும் படி கேட்டுக் கொண்டுள்ளனர்.