கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!!

கேரளா அருகே சிங்கப்பூரில் பதிவான கப்பலில் தீ!! நால்வரைக் காணவில்லை!!

சிங்கப்பூரில் பதிவு செய்யப்பட்ட Wan Hai 503 கப்பல் இந்தியாவின் கேரளா மாநிலத்திற்கு அருகே தீப்பிடித்துள்ளது.இச்சம்பவம் நேற்று(ஜூன் 9) மதியம் சுமார் 12.30 மணியளவில் நடந்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் நேற்று அறிக்கை வெளியிட்டது.

கப்பலில் 22 ஊழியர்கள் இருந்ததாகவும் அதில் சிங்கப்பூரர்கள் எவரும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

18 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும்,சிலருக்கு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

மீதமுள்ள நால்வரை தேடி காணவில்லை.

இச்சம்பவம் குறித்து இந்திய அதிகாரிகளுக்குப் புகார் கொடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

இந்தியக் கடலோர காவல்படை மற்றும் இந்தியக் கடற்படை ஊழியர்களுக்கு உதவி வருகின்றன.அவை காணாமல் போன நால்வரைத் தேடும் பணியில் ஈடுபட்டுள்ளன.

கப்பலை நிர்வகிக்கும் Wan Hai Lines நிறுவனத்துடன் இணைந்து சிங்கப்பூர் கடல்துறை,துறைமுக ஆணையம் நிலவரத்தைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று ஆணையம் கூறியது.