சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களுக்கு முதல்முறையாக விருது!!

சிங்கப்பூரில் பணிபுரியும் 12 வெளிநாட்டு ஊழியர்களுக்கு தேசியத் தொழிற்சங்கக் காங்கிரஸின் வெளிநாட்டு ஊழியர் நிலையம் முதல்முறையாக விருதுகளை வழங்கி கௌரவித்துள்ளது.

விருதுகளைப் பெற்ற ஊழியர்கள் அனைவரும் கட்டுமான துறையைச் சேர்ந்தவர்கள் என்று 8world செய்தித்தளம் வெளியிட்டுள்ளது.

வேலையிடப் பாதுகாப்பு மற்றும் உற்பத்தி திறனுக்கான பங்களிப்புகளுக்காக அவர்களுக்கு சிறந்த ஊழியருக்கான விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது.

ஜூன் 8 ஆம் தேதி Soon Lee பொழுதுபோக்கு மன்றத்தில் நடைபெற்ற மே தினச் சிறப்பு நிகழ்ச்சியில் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.இதனை 8 world செய்தித்தளம் தெரிவித்தது.

சிங்கப்பூர் தனது 60 வது பிறந்தநாளை கொண்டாடும் வேளையில் சிங்கப்பூருக்கு முக்கிய பங்கு வகிக்கும் வெளிநாட்டு ஊழியர்களை கௌரவிப்பது முக்கியம் என்று வெளிநாட்டு ஊழியர் நிலையம் கூறியது.

அவர்களுக்கு தேவையான ஆதரவையும் வழங்க வேண்டும் என்று வெளிநாட்டு ஊழியர் நிலையம் கூறியது.