
பெருவில் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற ஐந்து பேர் 2 மாதங்களுக்கு முன்னர் திடீரென காணாமல் போயினர்.காணாமல் போன ஐந்து பேர் குறித்த எந்த தகவலும் கிடைக்காமல் இருந்தது.
இந்நிலையில் 55 நாட்களுக்குப் பிறகு அவர்கள் உயிருடன் மீட்கப்பட்ட செய்தி ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பெருவைச் சேர்ந்த மூவரும், கொலம்பியாவைச் சேர்ந்த இருவரும் மார்ச் மாத நடுப்பகுதியில் கடலுக்குச் சென்ற போது தொலைந்தனர்.
ஜப்பானின் கழிப்பறை புகைப்படங்களுக்காக பெண்ணிற்கு கிடைத்த உலக விருது…!!!
பயணத்தின் இரண்டாவது நாளில் படகின் இயந்திரம் பழுதடைந்ததால் அவர்கள் சிக்கல்களைச் சந்தித்ததாகத் தெரிகிறது.அவர்களால் படகை இயக்க முடியாமல் இருந்துள்ளது.
அவர்களால் தங்கள் வழியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் படகில் மின்சாரமும் இல்லாமல் இருந்துள்ளது.
கடலில் சிக்கித் தவித்த ஐவரும் கடலில் கிடைத்த மீன்களை சாப்பிட்டு வந்தும் மழை நீரை குடித்தும் உயிர் வாழ்ந்தனர்.
கிட்டத்தட்ட சுமார் 2 மாதங்களுக்குப் பிறகு அவர்கள் மீள வழி கிடைத்தது. கடலில் இருந்த மற்றொரு மீன்பிடிப் படகின் குழுவினர் இந்த ஐந்து பேரையும் கண்டுபிடித்தனர்.
அவர்கள் ஐந்து பேரையும் ஈக்வடாரில் உள்ள கலபகோஸ் தீவுகளில் விட்டுச் சென்றனர்.தற்போது ஐந்து பேரும் நலமுடன் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.