சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ள மாலத்தீவு ஜனாதிபதி முயிஸ்...!! இது தொடர்பான விவரங்களை அறிய இந்த பதிவை முழுவதுமாக படியுங்கள்...!!!
சிங்கப்பூர்:ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தின் அழைப்பின் பேரில், மாலத்தீவு ஜனாதிபதி முயிஸ், நாளை (30 ஆம் தேதி) தொடங்கி மூன்று நாட்கள் சிங்கப்பூருக்கு வருகை தரவுள்ளார்.
2023 இல் பதவியேற்ற பிறகு முயிஸ் சிங்கப்பூருக்கு மேற்கொள்ளும் முதல் பயணம் இதுவாகும்.
வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், முயிஸ் வரவேற்பு விழாவில் கலந்து கொண்டு ஜனாதிபதி தர்மன் சண்முகரத்னத்தை சந்திப்பார் என்று தெரிவித்துள்ளது.
தர்மன் சண்முகரத்னமும் அவரது மனைவி ஜேன் ஃபுஜிகியும் முயிஸை மகிழ்விக்க ஒரு அரசு விருந்தை வழங்குவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிங்கப்பூருக்கும் மாலத்தீவுக்கும் இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்ட 50வது ஆண்டு நிறைவை கொண்டாடும் வகையில் இந்த விருந்து உபசரிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் இரு நாடுகளின் அதிகாரிகளும் திறன் மேம்பாடு, நிலையான வளர்ச்சி மற்றும் சுற்றுச்சூழல், தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும்.
கூடுதலாக, மாலத்தீவு முதலீட்டு வாரியத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட உயர்மட்ட முதலீட்டு மன்றத்திலும் முயிஸ் கலந்து கொள்வார்.
மேலும் துறைமுக மேலாண்மை, தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி மற்றும் பயிற்சி, நகர்ப்புற திட்டமிடல் மற்றும் வீட்டுவசதி மேம்பாடு ஆகியவற்றில் மலேசியாவின் அனுபவத்தைப் பற்றி அறிய துவாஸ் துறைமுகம், தொழில்நுட்ப கல்வி நிறுவனத்தின் மத்திய வளாகம் மற்றும் நகர்ப்புற மறுசீரமைப்பு ஆணையத்தின் நகர்ப்புற திட்டமிடல் கேலரி ஆகியவற்றைப் பார்வையிடுவார்.
மேலும் முயிஸ் தேசிய ஆர்க்கிட் தோட்டத்திற்குச் சென்று புதிய வகை ஆர்க்கிட்களுக்குப் பெயரிடுவார் என்று கூறப்படுகிறது.