சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!!

சிங்கப்பூரில் புதிய சட்டம் இன்று முதல்!!

சிங்கப்பூரில் மோசடிகளில் இருந்து தப்பிக்க பாதுகாப்பு சட்டம் இன்று ஜூலை 1,2025 முதல் நடப்புக்கு வருகிறது.

புதிய சட்டத்தின் மூலம் மோசடி முயற்சிகளை தடுக்க வங்கிகளுக்கு காவல்துறை கட்டுப்பாட்டு உத்தரவு வழங்கலாம்.

தனிநபர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் கொடுக்கும் தகவல்கள் காவல் துறை முடிவெடுக்க உதவும்.

சம்பந்தப்பட்டவரின் வங்கி, தானியக்க வங்கி இயந்திர கடன் அட்டைகள் ஆகியவற்றின் பரிவர்த்தனையை முடக்க புதிய சட்டம் வழிவகை செய்யும்.

சிங்கப்பூரில் செயல்படும் முக்கியமான ஏழு வங்கிகளுக்கு கட்டுப்பாட்டு உத்தரவு பொருந்தும்.

கட்டுப்பாட்டு உத்தரவு அதிகபட்சம் ஒரு மாதம் நடப்பில் இருக்கும் தேவை இருந்தால் காவல்துறை அந்த உத்தரவை அதிகபட்சம் ஐந்து மாதம் வரை நீட்டிக்க முடியும்.

தனி நபருக்கான மோசடி அபாயம் நீங்கியதாக காவல்துறை அறிந்தால் ஒரு மாதத்திற்குள் கட்டுப்பாட்டு உத்தரவை நீக்கலாம்.

இந்த ஆண்டு 2025 ஜனவரி 7ஆம் தேதி அந்தச் சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan