ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

ஆன்லைன் விளையாட்டு மோகம்..!! சீனாவில் இளைஞன் செய்த விபரீத செயல்..!!

சீனாவின் குவாங்ஸோ (Guangzhou) நகரில் உள்ள இளைஞன்  “Zip Tie Escape Challenge “என்ற ஆன்லைன் விளையாட்டு மோகத்தால் விபரீத செயலில் ஈடுபட்டுள்ளார்.

இந்த விளையாட்டானது ஆன்லைனில் மிக வேகமாக பரவி வருகிறது.அதனால் இந்த விளையாட்டை அவர் முயற்சி செய்து பார்த்துள்ளார்.

அந்த முயற்சியின் போது அந்த விளையாட்டானது அவரது உயிருக்கு ஆபத்தான நிலையில் முடிந்துள்ளது.

பிளாஸ்டிக் ஜிப் டைகளைப் பயன்படுத்தி உடலைக் கட்டிக்கொண்டு அதிலிருந்து தந்திரமாக வெளியே வரவ வேண்டும் என்பதே அந்த விளையாட்டின் இலக்காகும்.

அதுபோலவே அந்த இளைஞன் அவனை தன்னைத்தானே ஒரு படுக்கையில் வைத்து கட்டிக் கொண்டுள்ளார். பின்பு ஒரு போர்வையால் அவரது முழு உடலையும் போர்த்திக் கொண்டுள்ளார்

அதன் மீது ஒரு மீன் பிடி வலையை சுற்றி உள்ளாார். பின்பு கழுத்து முதல் பாதம் வரை நீளமான பிளாஸ்டிக் டைகளைக் கொண்டு இறுக்கமாக கட்டிக் கொண்டுள்ளார்.

இவ்வாறு செய்ததால் மூச்சு விடுவதற்கு சிரமப்பட்டு அந்த இளைஞர் அலறியுள்ளார்.

அந்த வழியே சென்று நபர் ஒருவர் இளைஞரின் அலறல் சத்தத்தை கேட்டு காவல்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் தீயணைப்புப் படையினருடன் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

அவர்கள் அலறல் சத்தம் கேட்ட வீட்டுக் கதவை உடைத்து பார்த்தபோது நகரக்கூட முடியாத நிலையில் அந்த இளைஞர் கட்டப்பட்டிருந்தார்.

அவரது கழுத்தில் இருந்த 2 ஜிப் டைகளும் மிகவும் இறுக்கமாக இருந்ததாகவும், நாங்கள் வர சற்று தாமதமாகி இருந்தால் கூட அந்த இளைஞரின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டிருக்கும் எனவும் தீயணைப்புப் படையினரில் ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

 

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK