சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!!!

சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!!!

சிங்கப்பூரில் செல்லப்பிராணிக்கு இன்ஷூரன்ஸ்!
பெரும்பாலான சிங்கப்பூரர்கள் அவர்கள் வளர்க்கும் செல்லப்பிராணிகளை தங்கள் குடும்பத்தில் ஒருத்தராகவே கருதுகின்றனர்.

2023 ஆம் ஆண்டு ஒரு தம்பதி அவர்கள் வளர்த்த நாயின் மருத்துவ கட்டணத்துக்காக வாங்கிய கடனை அடைக்க அவர்கள் மொத்த சேமிப்பையும் பயன்படுத்தியதோடு அவர்கள் வீட்டை விற்கும் நிலைக்கு ஆளாகினர்.

செல்லப் பிராணிகளால் ஏற்படக்கூடிய எதிர்பாராத கட்டணங்களை சமாளிக்க உரிமையாளர்கள் காப்புறுதி பக்கம் திரும்புகின்றனர்.


இது போன்ற காப்புறுதி பெரும்பாலான விலங்குகளுக்கான ஆலோசனை மருந்து அறுவை சிகிச்சை மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவது போன்ற கட்டணங்களை செலுத்த உதவுகின்றன.

ஓரிரு காப்புறுதி திட்டங்கள் மட்டுமே விபத்தில் இறந்த செல்லப் பிராணிகளுக்கு இழப்பீட்டுத் தொகையை வழங்குகிறது.


சிங்கப்பூரில் உள்ள பெரும்பாலான திட்டங்கள் செல்லப் பிராணிகளுக்கு ஒன்பது வயதாகும் வரை கட்டணங்களை கட்ட உதவுகின்றன.

ஆனால் சில திட்டங்கள் அந்த வயதையும் தாண்டி காப்புறுதி அளிக்கிறது.
பெரும்பாலான காப்புறுதி நிறுவனங்கள் ஒன்பது வயதான செல்லப்பிராணிகளின் திட்டத்தில் இணைப்பதை நிறுத்துவதால் முன்கூட்டியே உங்கள் செல்லப் பிராணிகளுக்கு காப்பூர் எடுப்பது மிகவும் சிறந்தது.


சிங்கப்பூரில் செல்லப் பிராணிகளுக்கான புற்றுநோய் சிகிச்சை அல்லது சிக்கலான அறுவை சிகிச்சை போன்றவற்றிக்கு எப்படியும் பல ஆயிரம் சிங்கப்பூர் டாலர்கள் செலவாகும்.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉👉 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan