சிங்கப்பூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்…!!!

சிங்கப்பூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்...!!!

சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அநாகரீகமான தாக்குதல்களுக்காக 10 ஆண்கள் மீது நாளை (15.07.2025) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.

பொதுப் பேருந்தில் 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 19 வயது நபர் ஒருவருக்கு எதிராக இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

60 வயதுடைய நபர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மார்க்கெட் தெருவிலுள்ள வணிகக் கட்டிடத்தில் 42 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சம்பவ இடத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.

அதேபோல், கடந்த நவம்பர் 19ஆம் தேதி, மவுண்ட்பேட்டன் சாலையிலுள்ள வணிக வளாகத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 51 வயது நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.

மேலும், 38 வயது நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் குற்றவாளி என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது ஏப்ரல் 5ஆம் தேதி 34 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக சந்தேகிக்கப்பட்டது.

அதே நபர் கடந்த ஆண்டு இறுதியில் மற்றொரு பெண்ணிடம் அதேபோன்ற செயல்களில் ஈடுபட்டதும் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் அவர் மீது இரண்டு வழக்குகள் சுமத்தப்படும்.

போலீசார் கேமரா மற்றும் விசாரணைகளின் மூலம் சந்தேக நபர்களை அடையாளம் கண்டுள்ளனர்.

இவை அனைத்தும் நாளைய விசாரணையில் முக்கிய அம்சமாக அமையவுள்ளன.

Follow us on : click here 

WHATSAPP CHANNEL LINK👉

👉
 https://whatsapp.com/channel/0029VakjPqJ0bIdqf8hGIR14 

Instagram  : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0 

Facebook  : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL

Telegram  : https://t.me/tamilan