சிங்கப்பூரில் அதிகரிக்கும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுகள்...!!!
சிங்கப்பூர்:சிங்கப்பூரில் அநாகரீகமான தாக்குதல்களுக்காக 10 ஆண்கள் மீது நாளை (15.07.2025) நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படவுள்ளது.
பொதுப் பேருந்தில் 20 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக, 19 வயது நபர் ஒருவருக்கு எதிராக இந்த ஆண்டு ஏப்ரல் 4ஆம் தேதி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
60 வயதுடைய நபர் ஒருவர், கடந்த ஆண்டு டிசம்பர் 3ஆம் தேதி மார்க்கெட் தெருவிலுள்ள வணிகக் கட்டிடத்தில் 42 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக சம்பவ இடத்திலேயே அவர் கைது செய்யப்பட்டார்.
அதேபோல், கடந்த நவம்பர் 19ஆம் தேதி, மவுண்ட்பேட்டன் சாலையிலுள்ள வணிக வளாகத்தில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக 51 வயது நபர் மீது சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், 38 வயது நபர் ஒருவர் மீண்டும் மீண்டும் குற்றவாளி என போலீசாரால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.