அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனைஇழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!!

அதிர்ச்சி..!!!சுமார் S$4 மில்லியனை இழக்கவிருந்த பெண் மருத்துவர்..!!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பெண் மருத்துவர் ஒருவர் ஆள்மாறாட்ட மோசடியில் சிக்கினார்.

அவர் சுமார் 4 மில்லியன் வெள்ளி பணத்தை இழந்திருக்கலாம்.

மருத்துவராகப் பணிபுரியும் அந்தப் பெண்ணுக்கு, வங்கி அதிகாரிகள் மற்றும் அரசு அதிகாரிகள் எனக்கூறி தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.

அவர் பண மோசடியில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிப்பதாக மோசடி நபர்கள் தெரிவித்தனர்.

பெண் மருத்துவரின் கணக்கை யாரோ ஹேக் செய்துள்ளதால், அதை உடனடியாக வேறு கணக்கிற்கு மாற்ற வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.

மோசடி நபர்கள் தெரிவித்த குறிப்பிட்ட வங்கியில் மருத்துவருக்கு கணக்கு இல்லை.

இது குறித்து கேட்டபோது,அவர்கள் பெண் மருத்துவரின் அடையாள அட்டையின் கடைசி 4 இலக்கங்களை சரியாக அடையாளம் கூறினர்.

குழப்பமடைந்த மருத்துவர் போலி அதிகாரிகளுடன் இரண்டு மணி நேர வீடியோ அழைப்பில் ஈடுபட்டார்.

போலி அதிகாரிகள் வங்கியில் ‘புதிய கணக்கை’ எவ்வாறு உருவாக்குவது என்பதைக் காட்டினர்.

ஆனால் அவர்கள் உண்மையில் அதைச் செய்யவில்லை.

அவர்கள் மருத்துவரை தங்கள் கணக்கிற்கு பணத்தை மாற்றும்படி கூறியுள்ளனர்.

பின்னர் மருத்துவருக்கு உண்மையான அதிகாரிகளிடமிருந்து அழைப்பு வந்தது.

மருத்துவர் மோசடி செய்பவர்களுடன் தொடர்பில் இருப்பதாக அவர்கள் எச்சரித்தனர்.

மோசடிக்காரர்கள் கூறும் சந்தேகத்துக்குரிய அம்சங்களை அவர்கள் தெரிவித்தனர்.

இது அந்தப் பெண்ணுக்கு அதிகாரிகளின் அடையாளத்தை நம்புவதற்கு உதவியது.

எனவே அவர் உடனடியாக போலி மோசடி செய்பவர்களுடனான அழைப்பை துண்டித்தார்.

அவர் தனது வங்கிக் கணக்கு விவரங்களையும் மாற்றினார்.

இது குறித்து அந்த பெண், மோசடிகளில் யார் வேண்டுமானாலும் ஏமாற்றப்படலாம். காவல்துறையினரின் உதவியுடன் நான் காப்பாற்றப்பட்டேன்.எனவே இதுபோன்ற மோசடி நபர்களிடமிருந்து பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கூறினார்.