சின் சிவி சாலையில் நடந்த அதிர வைத்த சம்பவம்..!!

சின் சிவி சாலையில் நடந்த அதிர வைத்த சம்பவம்..!!

சிங்கப்பூர்: சிங்கப்பூரின் சின் சிவி ரோடு, பிளாக் 51-இல் (08.11.25) அதிகாலை 1 மணி முதல் 3 மணி வரை நடந்த சண்டையில் 56 வயது நபர் ஒருவர் உயிரிழந்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக 58 வயதான டான் பூன் ஹுய் மற்றும் 59 வயதான போ சூன் கியாட் ஆகியோர் மீது கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

(09.11.25) இருவரும் காணொளி வழியாக நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

டான் தற்போது சாங்கி பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். காணொளி வழியாக பேசிய போது அவர் கழுத்துப் பட்டை அணிந்து படுக்கையில் படுத்திருந்தார்.

நீதிமன்றத்தில் அவர் “என் கால் வீங்கியிருப்பதால் நடக்க முடியவில்லை” என்று மாண்டரின் மொழியில் தெரிவித்தார். அதற்கு நீதிபதி,மருத்துவமனையில் மருத்துவர்களிடம் தேவையான சிகிச்சை பெறலாம் என்று கூறினார்.

அரசுத் தரப்பு, சம்பவ இடத்துக்குச் சென்று மேலான விசாரணை நடத்துவதற்காக இருவரையும் ஒரு வாரம் விசாரணைக் காவலில் வைக்க அனுமதி கேட்டது.

அதற்கு நீதிமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

Follow us on : click here 

Premium Job Link:https://www.sgtamilan.com/product/premium-member-ship

WHATSAPP CHANNEL LINK