சிங்கப்பூர் : பீஷான் மைதானத்தில் மும்முரமாக நடைபெறும் மேம்பாட்டு பணிகள்!!

பீஷான் விளையாட்டு மைதானத்தில் மேம்பாட்டு பணிகள் அவசரமாக மேற்கொள்ளப்படுகின்றன.
சிங்கப்பூரின் Lion City Sailors காற்பந்து அணிக்கும் ஐக்கிய அரபுச் சிற்றரசுகளின் Sharjah FC குழுவுக்கும் இடையே வட்டாரக் காற்பந்து இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.
அதனை முன்னிட்டு ஆயத்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
வரும் ஞாயிற்றுக்கிழமை இறுதிச் சுற்று நடைபெறவுள்ளது.
சிங்கப்பூர் காற்பந்து அணி ஆசிய சாம்பியன்ஸ் லீக் இரண்டின் இறுதிச் சுற்றில் தகுதி பெறுவது இதுவே முதல்முறை.இதனால் இது வரலாற்றுச் சிறப்புமிக்க போட்டியாக கருதப்படுகிறது.
விளையாட்டு மைதானத்தை நல்ல தரத்துக்கு கொண்டு வர மேம்பாட்டு வேலைகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கின்றன.
மைதானத்தில் ஆட்டத்தை ரசிகர்கள் நின்று கொண்டே பார்க்க 3 புதிய பகுதிகள் அமைக்கப்படுகின்றன.இந்த பகுதிகளில் 10000 ரசிகர்கள் வரை போட்டியைக் காண முடியும்.அது முன்பு இருந்ததைவிட மும்மடங்கு அதிகம்.
மைதானம் முழுமையாக நிரம்பிவிடும் என்று எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
Follow us on : click here
Instagram : https://www.instagram.com/sg_tamilan_official?igsh=eG16Z3B6NW93bmw0
Facebook : https://www.facebook.com/profile.php?id=100089382270449&mibextid=ZbWKwL
Telegram : https://t.me/tamilan
