சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!!

சிங்கப்பூர் தேர்தல் : மாலை 5 மணி நேர நிலவரப்படி 82% வாக்குப்பதிவு!!

சிங்கப்பூரில் பொதுத்தேர்தல் நடைபெற்று வருகிறது.பலரும் தங்கள் ஜனநாயக கடமையைத் தவறாமல் வாக்களித்து வருகின்றனர்.

இன்று மாலை 5 மணி நிலவரப்படி சுமார் 82 சதவீதத்தினர் தங்கள் வாக்குகளை வாக்காளர்கள் வாக்களித்துள்ளதாக தேர்தல்துறை தெரிவித்துள்ளது.

தீவு முழுவதும் 1240 வாக்களிப்பு நிலையங்களில் 2 மில்லியனுக்கும் அதிகமானோர் வாக்களித்துள்ளதாக தேர்தல் துறை கூறியது.

கடைசி நேர பரபரப்பைத் தவிர்க்க சிங்கப்பூரர்கள் நேரம் கிடைக்கும் போது வாக்களிக்குமாறு தேர்தல் துறை கேட்டுக்கொண்டது.

வாக்களிப்பு நிலையங்கள் இன்று இரவு 8 மணிக்கு மூடப்படும்.